ரெங்கசாமி பிள்ளை அவர்கள், 1953ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் இருந்து மலாயாவிற்கு வந்தார். முதலில் மலாயாவில் சில இடங்களில் சாதாரண வேலைகளைச் செய்தார். பின்னர், புக்கிட் மெர்தாஜாமில் இருந்த ஒரு வங்கியில் அலுவலகப் பையனாக வேலையில் சேர்ந்தார்.
![]() |
வள்ளல் ரெங்கசாமி பிள்ளையின் மூத்தப் புதல்வர் ரேனா துரைசிங்கம் |
அதன் பின்னர், மொத்த விற்பனை வணிகத் துறையில் காலடி வைத்தார். கடைசியில் நில உடைமைத் துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
சிக்கனமான வாழ்க்கை. சிறப்பான அணுகு முறைகள். வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்தார். பங்குச் சந்தையில் ஈடுபட்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்தார். காலப் போக்கில் தெலுக் இந்தானில் சின்னச் சின்ன நிலங்களை வாங்கினார். அப்படியே செல்வந்தரானார். இதுதான் அவருடைய வாழ்க்கைச் சுருக்கம்.
சிக்கனமான வாழ்க்கை. சிறப்பான அணுகு முறைகள். வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்தார். பங்குச் சந்தையில் ஈடுபட்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்தார். காலப் போக்கில் தெலுக் இந்தானில் சின்னச் சின்ன நிலங்களை வாங்கினார். அப்படியே செல்வந்தரானார். இதுதான் அவருடைய வாழ்க்கைச் சுருக்கம்.
![]() |
பெர்னார்ட் ஷா, ரேனா, பெர்லிஸ் மந்திரி புசார் |
பணம் இருப்பவனிடம் குணம் இருக்காது என்பது ஒரு பொதுவான கருத்து. ஆனால், ரெங்கசாமி பிள்ளை அதற்கு எல்லாம் விதிவிலக்கு. அவர் ஒரு கொடை வள்ளல். அப்படிச் சொல்வதில் தப்பு இல்லை என்று நினைக்கிறேன். ஏன் என்றால், கிடைத்தைக் குறைத்துக் காட்டும் உலகில், கொடுத்ததை மறைத்துக் காட்டும் குணம் படைத்தவர் இந்த வள்ளல் ரெங்கசாமி பிள்ளை.
அவர் இனம், மொழி, சமயம், சம்பிரதாயம் என்று எதையும் பார்க்கவில்லை. பள்ளிக்கூடங்கள், சமயத் தளங்கள், சமூக மண்டபங்கள் போன்ற பொது அமைப்புகளுக்கு, இயன்ற அளவுக்கு நிலங்களைத் தானமாக வழங்கி இருக்கிறார்.
அந்த வகையில், தெலுக் இந்தான் சான் மின் சீனப்பள்ளிக்கு ஒரு நிலப்பகுதியை எழுதி வைத்தார். அதன் மதிப்பு இப்போது பத்து இலட்சம் ரிங்கிட். அதே இடத்தில் வேறு ஒரு பகுதியில், ஒரு பள்ளிவாசல், ஓர் ஆலயம், இந்தியர்களின் இடுகாடு கட்டப்பட வேண்டும் என்றும் அவர் உயில் எழுதிச் சென்றார்.
2007 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி, சான் மின் சீனப்பள்ளியின் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. முன்னாள் துணைக் கல்வியமைச்சர் டத்தோ ஹோன் சுன் கிம் திறந்து வைத்தார்.
’ஒரு சீனப்பள்ளிக்கு ஓர் இந்தியர் தன்னுடைய நிலத்தை அன்பளிப்பு செய்து இருக்கிறார். இதைக் கண்டு என் மனம் நெகிழ்ந்து போகிறது’ என்றார் அமைச்சர். இந்த நிகழ்ச்சியில், ரெங்கசாமி பிள்ளையின் மனைவியும் ரேனா சகோதரர்களின் தாயாருமான ரேனா பார்வதியும் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.
1960களில் மலாயா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பகுதியில் பயின்ற 15 மாணவர்களுக்கு ரெங்கசாமி பிள்ளை நிதியுதவிகளைச் செய்துள்ளார். அதாவது உபகாரச் சம்பளம். அவர்களில் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ கே.பத்மநாபன், மலாயா பல்கலைக்கழகத் தமிழ்ப்பகுதியின் முன்னாள் தலைவர் டாக்டர் ராம சுப்பையா போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் சில கோடிகளைத் தாண்டும். ஆக, அவரை வள்ளல் என்று சொல்லலாமா. வேண்டாமா. நீங்களே சொல்லுங்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், நடந்த ஒரு நிகழ்ச்சி. மெர்டேக்கா தினத்தில், புக்கிட் மெர்தாஜாமில் இருந்த 30 இந்திய, மலாய்க்காரக் குடும்பங்களுக்கு, அமரர் ரெங்கசாமி பிள்ளை மெர்டேக்கா பரிசுகளை வழங்கினார். என்ன பரிசு தெரியுமா.
ஒரு குடும்பத்திற்கு ஓர் ஏக்கர் நிலம். அப்போது அந்த நிலத்தின் மதிப்பு 20,000 ரிங்கிட். இப்போது அதன் மதிப்பு ஒரு மில்லியன் ரிங்கிட். அதாவது 10 இலட்சம். மொத்தத்தில் மூன்று கோடி. தானமாக கொடுத்து இருக்கிறார்.
அதே சமயத்தில், தோட்டத் துண்டாடல்களினால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற இந்திய குடும்பங்களுக்கு, வீடுகள் கட்டிக் கொள்ள நிலங்களை அன்பளிப்பு செய்துள்ளார். தெலுக் இந்தானில் இருந்த சீனம், தமிழ்ப்பள்ளிகளுக்கும் சில ஏக்கர் நிலங்களை அன்பளிப்பு செய்து இருக்கிறார்.
மலேசியாவில் இவரைத் தவிர, வேறு யாராவது இந்த மாதிரி மெர்டேக்கா பரிசுகளைக் கொடுத்து பெருமைப்பட்டு இருப்பார்களா. தெரியவில்லை. விளக்குப் போட்டுத்தான் தேட வேண்டும். இவர் 1986 ஆம் ஆண்டு, தன்னுடைய 68ஆவது வயதில் அமரரானார்.
அவர் இனம், மொழி, சமயம், சம்பிரதாயம் என்று எதையும் பார்க்கவில்லை. பள்ளிக்கூடங்கள், சமயத் தளங்கள், சமூக மண்டபங்கள் போன்ற பொது அமைப்புகளுக்கு, இயன்ற அளவுக்கு நிலங்களைத் தானமாக வழங்கி இருக்கிறார்.
அந்த வகையில், தெலுக் இந்தான் சான் மின் சீனப்பள்ளிக்கு ஒரு நிலப்பகுதியை எழுதி வைத்தார். அதன் மதிப்பு இப்போது பத்து இலட்சம் ரிங்கிட். அதே இடத்தில் வேறு ஒரு பகுதியில், ஒரு பள்ளிவாசல், ஓர் ஆலயம், இந்தியர்களின் இடுகாடு கட்டப்பட வேண்டும் என்றும் அவர் உயில் எழுதிச் சென்றார்.
2007 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி, சான் மின் சீனப்பள்ளியின் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. முன்னாள் துணைக் கல்வியமைச்சர் டத்தோ ஹோன் சுன் கிம் திறந்து வைத்தார்.
’ஒரு சீனப்பள்ளிக்கு ஓர் இந்தியர் தன்னுடைய நிலத்தை அன்பளிப்பு செய்து இருக்கிறார். இதைக் கண்டு என் மனம் நெகிழ்ந்து போகிறது’ என்றார் அமைச்சர். இந்த நிகழ்ச்சியில், ரெங்கசாமி பிள்ளையின் மனைவியும் ரேனா சகோதரர்களின் தாயாருமான ரேனா பார்வதியும் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.
1960களில் மலாயா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பகுதியில் பயின்ற 15 மாணவர்களுக்கு ரெங்கசாமி பிள்ளை நிதியுதவிகளைச் செய்துள்ளார். அதாவது உபகாரச் சம்பளம். அவர்களில் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ கே.பத்மநாபன், மலாயா பல்கலைக்கழகத் தமிழ்ப்பகுதியின் முன்னாள் தலைவர் டாக்டர் ராம சுப்பையா போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் சில கோடிகளைத் தாண்டும். ஆக, அவரை வள்ளல் என்று சொல்லலாமா. வேண்டாமா. நீங்களே சொல்லுங்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், நடந்த ஒரு நிகழ்ச்சி. மெர்டேக்கா தினத்தில், புக்கிட் மெர்தாஜாமில் இருந்த 30 இந்திய, மலாய்க்காரக் குடும்பங்களுக்கு, அமரர் ரெங்கசாமி பிள்ளை மெர்டேக்கா பரிசுகளை வழங்கினார். என்ன பரிசு தெரியுமா.
ஒரு குடும்பத்திற்கு ஓர் ஏக்கர் நிலம். அப்போது அந்த நிலத்தின் மதிப்பு 20,000 ரிங்கிட். இப்போது அதன் மதிப்பு ஒரு மில்லியன் ரிங்கிட். அதாவது 10 இலட்சம். மொத்தத்தில் மூன்று கோடி. தானமாக கொடுத்து இருக்கிறார்.
அதே சமயத்தில், தோட்டத் துண்டாடல்களினால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற இந்திய குடும்பங்களுக்கு, வீடுகள் கட்டிக் கொள்ள நிலங்களை அன்பளிப்பு செய்துள்ளார். தெலுக் இந்தானில் இருந்த சீனம், தமிழ்ப்பள்ளிகளுக்கும் சில ஏக்கர் நிலங்களை அன்பளிப்பு செய்து இருக்கிறார்.
மலேசியாவில் இவரைத் தவிர, வேறு யாராவது இந்த மாதிரி மெர்டேக்கா பரிசுகளைக் கொடுத்து பெருமைப்பட்டு இருப்பார்களா. தெரியவில்லை. விளக்குப் போட்டுத்தான் தேட வேண்டும். இவர் 1986 ஆம் ஆண்டு, தன்னுடைய 68ஆவது வயதில் அமரரானார்.
No comments:
Post a Comment