Showing posts with label திருப்பத்தூர். Show all posts
Showing posts with label திருப்பத்தூர். Show all posts

Tuesday, October 2, 2012

ரேனா பிள்ளை மணிமண்டபம் - 12


ந்தியாவில் உடலுறுப்பு ஊனமுற்றவர்களுக்கு என்று ஒரு கருணை இல்லத்தையும் ரேனா சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். அதில் இப்பொது 100 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

'எங்கள் தந்தையார் என்ன செய்தாரோ அதைத்தான் நாங்களும் செய்கிறோம். சமுதாயத்திற்கு எங்கள் குடும்பம் எப்போதும் கடமைப்பட்டு இருக்கிறது. நாங்கள் சம்பாதிப்பதில், ஒரு பங்கை அந்தச் சமுதாயத்திற்கே மீண்டும் கொடுக்க விரும்புகிறோம். உதவி என்பது ஒரு சுழற்சி’ என்கிறார் ரேனா துரைசிங்கம்.

இன்னும் ஒன்றை இங்கே சொல்ல வேண்டும். தமிழ்நாடு, திருப்பத்தூரில் ஒரு திருமண மண்டபத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். உள்ளூர் மக்களின் தேவைகளுக்காக அந்த மண்டபம் பயன்படுகிறது. அதன் பெயர் வள்ளல் ரேனா பிள்ளை மணிமண்டபம். லோட்டஸ் குழுமத்தின் பெயரில் இயங்கி வருகிறது.