Showing posts with label தெலுக் இந்தான். Show all posts
Showing posts with label தெலுக் இந்தான். Show all posts

Friday, September 21, 2012

சான் மின் சீனப்பள்ளி - 8

வர் இனம், மொழி, சமயம், சம்பிரதாயம் என்று எதையும் பார்க்கவில்லை. பள்ளிக்கூடங்கள், சமயத் தளங்கள், சமூக மண்டபங்கள் போன்ற பொது அமைப்புகளுக்கு, இயன்ற அளவுக்கு நிலங்களைத் தானமாக வழங்கி இருக்கிறார். 

சான் மின் சீனப்பள்ளி திறப்புவிழாவில்

அந்த வகையில், தெலுக் இந்தான் சான் மின் சீனப்பள்ளிக்கு ஒரு நிலப்பகுதியை எழுதி வைத்தார். அதன் மதிப்பு இப்போது பத்து இலட்சம் ரிங்கிட். அதே இடத்தில் வேறு ஒரு பகுதியில், ஒரு பள்ளிவாசல், ஓர் ஆலயம், இந்தியர்களின் இடுகாடு கட்டப்பட வேண்டும் என்றும் அவர் உயில் எழுதிச் சென்றார். 2007 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி, சான் மின் சீனப்பள்ளியின் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. முன்னாள் துணைக் கல்வியமைச்சர் டத்தோ ஹோன் சுன் கிம் திறந்து வைத்தார்.

சான் மின் சீன இடைநிலைப்பள்ளி
"ஒரு சீனப்பள்ளிக்கு ஓர் இந்தியர் தன்னுடைய நிலத்தை அன்பளிப்பு செய்து இருக்கிறார். இதைக் கண்டு என் மனம் நெகிழ்ந்து போகிறது" என்றார் அமைச்சர். இந்த நிகழ்ச்சியில், ரெங்கசாமி பிள்ளையின் மனைவியும் ரேனா சகோதரர்களின் தாயாருமான ரேனா பார்வதியும் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.

 

வள்ளல் ரெங்கசாமி பிள்ளை - 7

சிக்கனமான வாழ்க்கை. சிறப்பான அணுகு முறைகள். வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்தார். பங்குச் சந்தையில் ஈடுபட்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்தார். காலப் போக்கில் தெலுக் இந்தானில் சின்னச் சின்ன நிலங்களை வாங்கினார். அப்படியே செல்வந்தரானார்.


2008 ஆம் ஆண்டு உணவக உரிமையாளர்
சங்கக் கூட்டத்தில் டத்தோ ராமலிங்கம்

 
பணம் இருப்பவனிடம் குணம் இருக்காது என்பது ஒரு பொதுவான கருத்து. ஆனால், ரெங்கசாமி பிள்ளை அதற்கு எல்லாம் விதிவிலக்கு. அவர் ஒரு கொடை வள்ளல். அப்படிச் சொல்வதில் தப்பு இல்லை என்று நினைக்கிறேன். ஏன் என்றால், கிடைத்தைக் குறைத்துக் காட்டும் உலகில், கொடுத்ததை மறைத்துக் காட்டும் குணம் படைத்தவர் இந்த வள்ளல் ரெங்கசாமி பிள்ளை.