Friday, September 21, 2012

சான் மின் சீனப்பள்ளி - 8

வர் இனம், மொழி, சமயம், சம்பிரதாயம் என்று எதையும் பார்க்கவில்லை. பள்ளிக்கூடங்கள், சமயத் தளங்கள், சமூக மண்டபங்கள் போன்ற பொது அமைப்புகளுக்கு, இயன்ற அளவுக்கு நிலங்களைத் தானமாக வழங்கி இருக்கிறார். 

சான் மின் சீனப்பள்ளி திறப்புவிழாவில்

அந்த வகையில், தெலுக் இந்தான் சான் மின் சீனப்பள்ளிக்கு ஒரு நிலப்பகுதியை எழுதி வைத்தார். அதன் மதிப்பு இப்போது பத்து இலட்சம் ரிங்கிட். அதே இடத்தில் வேறு ஒரு பகுதியில், ஒரு பள்ளிவாசல், ஓர் ஆலயம், இந்தியர்களின் இடுகாடு கட்டப்பட வேண்டும் என்றும் அவர் உயில் எழுதிச் சென்றார். 2007 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி, சான் மின் சீனப்பள்ளியின் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. முன்னாள் துணைக் கல்வியமைச்சர் டத்தோ ஹோன் சுன் கிம் திறந்து வைத்தார்.

சான் மின் சீன இடைநிலைப்பள்ளி
"ஒரு சீனப்பள்ளிக்கு ஓர் இந்தியர் தன்னுடைய நிலத்தை அன்பளிப்பு செய்து இருக்கிறார். இதைக் கண்டு என் மனம் நெகிழ்ந்து போகிறது" என்றார் அமைச்சர். இந்த நிகழ்ச்சியில், ரெங்கசாமி பிள்ளையின் மனைவியும் ரேனா சகோதரர்களின் தாயாருமான ரேனா பார்வதியும் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.

 

No comments:

Post a Comment